Friday, November 21, 2014
ருத்ரய்யாவுக்கு பிரபல்யம் தேவையில்லை
Sunday, July 20, 2014
VIP: வேலையில்லா பட்டதாரி விமர்சனம்
Rating: 2.5/5
Friday, February 1, 2013
Criticisms On Kamal Hassan And Clarifications Regarding Viswaroopam Issue
1. Why did Kamal in first place screen the movie to Muslim groups?
Clarification: When Kamal announced the delay of his movie
due to DTH plans, a media person asked whether he would screen the movie to
muslim groups as per their request. Kamal replied that he would if he thought
it is very important and asked media not to turn this into a sensation.
Now after screening the movie, Kamal Hassan said, “I
screened it because they are my brothers. I thought they would understand”. At
this juncture, everybody thought that Kamal was trying to appease muslims. But
the reality came to light only few days ago officially.
Tamil Nadu’s chief minister revealed in her interview that Kamal Hassan screened the movie to muslim groups only after the government insisted to do so. So it was not Kamal who initiated. From the beginning he didn't blame anyone for anything.
2. Kamal Hassan was the sole reason for the delay in release. He delayed the screening meant for muslims- TN GOVERNMENT
Clarification: Should every creator screen a movie to a particular group before the release just because they are ready to create law and order problem? Isn't this a bad example for trouble makers?
3. Central Censor board didn’t follow norms while certifying viswaroopam
Clarification: This accusation needs proper research and proof. There is none till now from Advocate general. As far as we are concerned, there is proof to believe that this accusation is not true. Central Censor board did 14 cuts in the movie(1.8 minutes).
4. Movie portrays Quran as a tool for Terrorism
Clarification from Kamal: You are trying to compile scene one and two to find a meaning. They are separate. Cinema is a language and one should watch enough number of movies to understand the artistry. But, I cannot ask Muslims to leave their practice (Muslims should not watch movies as per their religion). So please discuss with your brothers (fellow Muslims) who watch movies frequently.
Though Kamal feels so, He accepted to delete scenes regarding Quran as they feel offended. Kamal deleted a song in Manmadhan ambu when Hindus felt offended.
5. Talibans are made terrorists by America. Kamal Hassan has not shown their real face
Clarification from Kamal: I know that those terrorists are what they are due to another terrorist activity by America. But that is a different point of view. Why should I paint them white to appease fundamentalists?
6. Kamal Hassan never felt that he should leave the country when Indians were suffering. Now as he was personally affected, is it fair to give such a statement? Indian people are fair to him. Then why he has to leave the country?
Clarification: Kamal Hassan’s statement was not conceived as it should be like always. His speech was so clear. What he actually said was,
“The judge felt that an individual’s wealth is not important before India’s integrity. I am ready to lose my wealth if India can stay united. But Tamil Nadu should not think that I will go down. If I cannot live here, I will search for a secular state in India or Abroad. I don’t have any anger on the people. I will make only Tamil Movies wherever I stay”
In this statement Kamal clearly identifies Tamil Nadu to be non-secular as the judge felt that his personal right is not important. He was also angry that the government was only expecting Kamal Hassan to satisfy Muslim protesters and not his freedom of speech. So, it is clear that Kamal gave that statement only because his freedom of speech was challenged. He was only angry for not being allowed to express his opinion on behalf of the people who suffer. I repeat here what he said about the masses. He said in the same interview that he is not angry on the people.
7. This issue created a bad image on the government as for having a personal agenda against Kamal Hassan
Clarification: Kamal Hassan never said to the media that the government was determined to finish him. He said, “Actually Jaya Tv was not ready to buy our film due to technical issues and also due to criticisms from muslim community. There after there was no pressure”
While speaking about his comments in Chidambaram book
release function he said,
Absolutely, I am not the one who decides a Prime Minister. I
have different relations with all the politicians. I am A-political. She is
political. We have our own differences.
8. Kamal looked for legal solutions first. But after Chief Minister clarified on this issue, he went down and said, “There is no need for appeal in Supreme court”. He actually played safe!
Clarification: This was the course of events that happened since the ban:
1. Kamal Hassan screened the movie to Protesters and he fled
to Los Angeles for Hollywood Premiere.
2. TN government banned the movie when Kamal Hassan was half
way through.
3. The first option: Kamal Hassan has to meet the concerned
people in the government and ask for withdraw of ban. But this was not possible immediately as
Kamal Hassan was away.
4. The second option: Chandra Hassan, on behalf of Kamal
Hassan filed a writ petition In High court.
5. Individual judge revoked the ban. Government challenged
the verdict and the ban was reiterated. Bench postponed the hearing till Monday.
6. Kamal sent a letter to CM asking to meet her. CM refused
to meet as the case was in the court
7. Kamal gave an emotional speech as he had a financial
crisis. The D-day for his loan amount was Feb -1. He was paying 5 lacks as
interest every day. He was desperately in need of a release date.
8. He decided to meet five Muslim groups and accepted to
delete the scenes with Quran. He says, “Now we (himself and Muslims) are
settled”. Chandra Hassan said, “If bench court doesn't revoke the ban, we will
think of moving to Supreme Court”
9. 24 Muslim organizations said, “We were not called. We
have nothing to do with those five groups”
10. CM gave an interview asking Kamal Hassan to meet those
who still oppose and cleared the air that her government has no issues if an
amicable solution is reached.
11. Kamal Hassan and co decides to find a solution at the
earliest as possible and leaves the idea of moving to the court.
Here, the only issue that stood before Kamal Hassan was his financial crisis and not pressure from government. After the chief minister found mistakes in his actions, he just explained his stand and never apologized to anything. He thanked Chief Minister by saying, “At last she spoke out. I thank her for understanding”
I think this article clears all accusations on Kamal Hassan. I hope the movie releases soon and I am eager to watch it in Auro 3D sound.
NOTE: Compilation based on various interviews given by Kamal hassan in news channels.
Monday, December 10, 2012
லைஃப் ஆஃப் பை விமர்சனம்
டிசம்பர் ஒன்பதன்று அபிராமி ரோபோ தியேட்டரில் இந்த படத்தை பார்த்தேன். இது Cast Away மாதிரி இருக்கும் என்று சிலர் சொன்னார்கள். ஆனாலும் இந்தியாவில், அதிலும் பாண்டிச்சேரியில் எடுத்த படம் என்பதால் போய் பார்த்தேன். அந்த நினைப்பு பொய் என்று தெரிந்தது. இது ஒரு மனிதனுக்கும், விலங்குமான தொடர்பு சம்மந்தப் பட்ட படம்.
Sunday, December 9, 2012
DTH தொழில் நுட்பம் பற்றி கமலின் பேச்சு!
DTH ஒரு புதிய பரிணாமம்:
புதிய முயற்சிகளை, கண்டுபிடிப்புகளை முதலில் உதாசீனம் செய்வதும் ஏளனம் செய்வதும் ஏன்... அவைகளைக் கண்டனம் செய்வதும்கூட உலக வழக்கம்.
உலகம் உருண்டை வடிவம் என்று சொன்ன விஞ்ஞானி கலீலியோவை எரித்துக் கொல்ல வேண்டும் என்று சொன்ன இஸ்பானிய ராணி முதல் இன்றைய சினிமாத்துறையினர் வரை இம் மனப்பாங்கு நீடிக்கிறது.
ராஜ்கமல் நிறுவனத்தின் DTH முயற்சியையும் புரிதல் இல்லாததால் ‘புறக்கணிப்போம், புறந்தள்ளுவோம்’ என்ற பதற்றக்குரல்கள் எழுகின்றன. தேவையற்ற புரளிகளையும் கிளப்புகிறது ஒரு கூட்டம்.
ஆனால் திரைத்துறையில் ஒரு பெரும் கூட்டம் – பெரும்பான்மை – ‘இது சினிமா வர்த்தகத்தின் புதிய பரிணாம வளர்ச்சி; தமிழ் சினிமாவை, ஏன்… உலக சினிமாவையே புதிய வருமான எல்லைகளைக் கடக்க வைக்கும் முயற்சி’ என்று என்னைப் பாராட்டுகிறது. இது சந்தோஷமான செய்தி. DTHற்கு வெகுவான வரவேற்பு உள்ளது. இது சினிமாவை வலுப்படுத்தும் இன்னொரு வியாபாரக்கிளை.
ஒரு சிறுபான்மை மட்டும் இது நாசம் விளைவிக்கும் என்று ஆவேசம் கொள்கிறது.
இந்த DTH என்பது என்ன? எல்லார் வீட்டிலும் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியா என்றால் இல்லை. நல்ல வசதி உள்ளவர்கள் அதிகப் பணம் கட்டி ஒரு கருவியின் மூலம் பல சானல்களையும் சினிமாவையும் பார்க்க உதவும் கருவி.
சினிமா அரங்குக்கே செல்ல மறந்த மறுத்த வசதியான கூட்டம் சினிமாவை வீட்டோடு அனுபவிக்க உதவும் ஊடகம் இந்த DTH. இப்படி வீட்டோடு தங்கியவர்களையும் சினிமா பக்கம் ஈர்க்கும் முயற்சியே இது. இதை விடுத்து படம் சரியாக அமையாததால் கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு ஓடப் பார்க்கிறார் கமல் என்று புரளிகள் கிளம்புகிறார்கள். கிடைத்ததைச் சுருட்டும் பழக்கம் எனக்கில்லை என்பதற்கு என் சினிமா வாழ்வும் நான் எடுத்த சினிமாக்களும் சான்று. என் படம் முடிந்து 7 மாதங்களாகின்றன. இப்பொழுது என் படத்திற்கு விலை கொடுத்து வாங்கப் பலர் பெரிய விலைகளைச் சொல்லியும் விற்காமல் எல்லா ஊடகங்களிலும் படம் நல்ல வசூலை ஈட்ட வழி செய்யவே இந்த முயற்சி. முழுமையாக மக்களின் ஆர்வம் வருமானமாக மாறி படத்தயாரிப்பாளர் கையில் சேர்ந்தால் திரை உலகு மேம்படும். நேர்மையான வியாபாரத்தில் அனைவரும் ஈடுபட்டு நல்லபடி வரிகட்டி அரசிடம் எடுத்துச் சொல்லி கறுப்புப் பண விளையாட்டைக் குறைத்துக் கொண்டால், 5 வருடத்தில் தமிழ் சினிமா இந்தி சினிமாவின் வசூலுக்கு நிகராகும்.
ஒரே நாளில் விஸ்வரூபத்தின் தமிழ்இசை இந்தியாவிலேயே அதிக விற்பனையான இசை தகடாக இருக்கிறது. இன்னும் சில தினங்களில் இந்தியாவிலேயே அதிக விற்பனையான இசை தகடாக முதல் இடத்திற்கு வி.ரூ வரும் என்கிறது வியாபார வட்டாரம். இது ஒரு வர்த்தக சாதனை. ஏற்கனவே உலக வர்த்தகம் இந்திய சினிமாவை நல்ல பொருள் ஈட்டும் களம் என நம்புகிறது. உலகத்துக்கு இருக்கும் நம்பிக்கை உள்ளூரிலும் இருக்க வேண்டாமா?
DTH ல் ஒரே ஒரு காட்சி காட்டப்படும். இதை பதிவு செய்ய முடியாது. பிரத்தியேகக் காட்சி முடியும் போது படம் DTH கருவியில் தங்காது. ஒரு முறை இப்படத்தைப் பார்க்க 1000 ரூபாய் கட்டணம். தியேட்டர் கட்டணத்தைப் போல் பத்து மடங்கு. காட்சியை வீட்டில் பார்த்த சந்தோஷம் தவிர சினிமா தியேட்டரில் கிடைக்கும் அனுபவம் கண்டிப்பாய்க் கிடைக்காது.
விஸ்வரூபத்தில் ஒலி அமைப்பு இதுவரை இந்திய ரசிகர்கள் கேட்டிராத அளவு அற்புதமாக செய்திருக்கிறோம். ஹாலிவுட் படத்தயாரிப்பில் அதுவும் மேல் தட்டுப் படங்களில் மட்டுமே தென்படும் தரமிது. இத்தனையும் செய்தது TV-ல் காட்டுவதற்கு மட்டும் அல்ல.
DTH வசதி தமிழக ஜனத்தொகையில் 3 விழுக்காடு வசதி படைத்தவர்களிடம் மட்டுமே இருக்கிறது. அதில் நாங்கள் 1½ விழுக்காடு வாடிக்கையாளர்களிடம் மட்டுமே காட்ட முடியும் என்கிறது கணக்கு. 100 பேர் ஒருவனுக்கு பயப்படுவது ஆச்சரியம்.
7½ கோடியில் ஒரு விழுக்காடு படம் பார்த்தால் குடியே கெடும் என்பவர்கள் நமது வருமானத்தில் 50% ஐ கள்ள DVD வியாபாரி கொண்டு போவதைத் தடுப்பதற்கு சிறு முயற்சிகளே செய்கிறார்கள். கள்ள DVDக் காரர்களுடன் கூட்டுச் சேர்ந்து பயிரை மேயும் வேலியை விட்டு விட்டு நேர்மையான வியாபாரத்தைத் தடுப்பது கண்டிக்கத்தக்கது.
திருடனுக்கு 50% கொடுத்தாலும் கொடுப்பேன்; உடையவனுக்கு ஒன்று கூட சேரக்கூடாது என்பது நியாயமில்லாத வாதம்.
இந்த முயற்சியால் தியேட்டரில் கூட்டம் குறையாது. தொலைக்காட்சியில் இலவசமாய் படம் காட்டினால் வியாபாரம் கெடும் என்று எதிர்த்துத் தோற்ற இதே வியாபாரிகள் இன்று சுபிட்சமாக வாழும் சான்றே போதுமானது. பகுத்தறிவாளனாக இருப்பினும் பெரும்பான்மையினர் புரிந்து கொள்ள ஒரு பக்தி விளக்கம். வீட்டில் பெருமாள் படம் காலண்டரில் தொங்குவதால் யாரும் திருப்பதிக்குப் போவதைக் குறைத்துக் கொண்டதாய்த் தெரியவில்லை. கிட்டதட்ட அந்த நிலைதான் சினிமா அரங்க அனுபவத்திர்கும் வீட்டில் மின் விசிறி இருப்பினும் காற்று வாங்க கூட்டம் கடற்கரைக்கு வருகிறது. ரேடியோவில் தன் குரல் கேட்டால் புகழ் குறையும் என்று, நினைத்துப் பாடாமல் இருந்த கர்நாடக பாகவதர்கள் போல் இருப்பது உசிதமல்ல. சமையலறையும் நல்ல சமையலும் பல வீடுகளில் இருப்பதால் ஹோட்டல்களை மூடிவிட்டார்களா என்ன?
முடிவாக இது முஸ்லிம்களை தவறாக சித்தரிக்கும் படம் என்று சந்தேகப்படுகிறதாம் ஒரு சில முஸ்லிம் அமைப்புகள். இந்த முஸ்லிம்கள் படத்தை பார்த்து, மனம் மாறி, தேவையில்லாமல் கமல்ஹாசனை சந்தேகப்பட்டுவிட்டோமே என்று மனதிற்குள் வருந்துவர். அவர்கள் மனதிற்குள் வருந்தினால் மட்டும் போதாது. நான் விடமாட்டேன். சகோதரனைச் சந்தேகப்பட்டதற்கு பிராயச்சித்தமாக அந்த முஸ்லிம் சகோதரர்கள் அடுத்த பக்ரீத்துக்கு அண்டா அண்டாவாக பிரியாணி விருந்தளிக்க வாக்களிக்க வேண்டும். அத்தனை பிரியாணியையும் நான் ஒரு ஆள் சாப்பிட இயலாது. ஆதலால் நம் அன்பின் சான்றாக பசித்த ஏழைப் பிள்ளைகளுக்கு அதை விருந்தாக்குங்கள். எப்போதும் போல அக்குழந்தைகளின் சாதி-மதம் பார்க்காமல் அதைச் செய்யுங்கள். அப்பெருவிருந்தில் கலந்து கொள்ள நான் பசியுடன் காத்திருக்கிறேன்.
-கமல் ஹாசன்
Saturday, December 8, 2012
கமல் ஹாசனின் DTH முயற்சி திரை அரங்கு உரிமையாளர்களை பாதிக்காது- சில காரணங்கள்

விஸ்வரூபத்தை DTH ல் வெளியிட முதல் முறையாக கமல் முயற்சி எடுத்துள்ளார். இதைப் பற்றி தயாரிப்பாளர்களுடனும், திரை அரங்கு உரிமையாளர்களுடனும் கலந்து ஆலோசித்திருக்கிறார்.
இந்த முடிவு தியேட்டர் உரிமையாளர்களை நஷ்டப் படுத்தாது என்பது தான் கமலின் வாதம். விளம்பரம் அதிகமாகும்; இதன் மூலம் மக்கள் திரையரங்கிற்கு அதிகமாக வருவார்கள் என்று அவர் சொல்கிறார்.
ஒரு குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் இருக்குமாம். இதை எல்லோரும் ஏற்க மாட்டார்கள். தனியாக படம் பார்க்கச் செல்பவர்கள் எல்லோரும் அரங்கத்திர்க்கே வருவார்கள். திருட்டு விசிடியில் படம் பார்க்க விருப்பம் இல்லாதவர்களால் தான் இப்போது படங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
இதை எதிர்த்து அபிராமி ராமநாதன் விடுத்துள்ள எச்சரிக்கையில், கிரிகெட்-ஐயும் திரை அரங்கையும் ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.
அவர் சொல்வது போல கிரிகெட்-ஐ டிவியில் ஒளிபரப்பிய பொது ஏற்பட்ட மாற்றத்தை போல இங்கு நிகழாது. காரணம்,
கிரிகெட்-ஐ மைதானத்தில் பார்ப்பதை விட டிவியில் தான் சிறப்பாக பார்க்க முடியும். ஆனால் படத்தை திரையரங்கில் பார்க்கும் போது கிடைக்கும் பார்வை அனுபவத்தை டிவியில் பெற முடியாது.
வீரர்களை அருகில் காண்பது மைதானத்தில் அரிது. டிக்கெட் வாங்க கால் கடுக்க நிக்க வேண்டும். ஆனால் திரையரங்கில் அவ்வாறு இல்லை.
இதனால் ஒரு வேளை டிவியில் பார்க்க முடியாவிட்டால் திரை அரங்கிலேயே பார்த்துக் கொள்ளலாம் என்றே எல்லோரும் யோசிப்பார்கள். ஓரிடத்தில் நான்காயிரம் பேர் கூடி நின்று பார்க்க நினைக்க மாட்டார்கள்.
Tuesday, September 20, 2011
எங்கேயும் எப்போதும் விமர்சனம்
சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு ஊடகம் என்ற கருத்தை பெரும்பாலானோர் கொண்டிருப்பதால், மாற்றுக் கருத்தை முன்வைக்க நான் முனைவதில்லை. ஆனால், மிகச் சிலப் படங்கள் மீதான மக்களின் பொழுதுபோக்குப் பார்வை திசை திரும்பிவிடுவதால், அச்சிற்சில படங்களுக்கு மட்டும், தேவை இருந்தால் விமர்சனம் எழுதுவேன். அதில் ஒன்று தான் இப்போது வெளியாகி ஓடிக் கொடிருக்கும் எங்கேயும் எப்போதும். சுருக்கமாக கதை மற்றும் நிறை குறைகள். கதை:
இரு காதல் ஜோடிகள்; அனன்யா, புதுவரவு (அபாஸ் நினைவுக்கு வந்தது. ஏன் என்று புரியவில்லை!). ஜெய், அஞ்சலி. இருவரின் காதலை மாற்றி மாற்றிக் காட்டிவிட்டு, பல சிறிய கதாபாத்திரங்களின் வாழ்க்கையையும், அவர்களின் சுக துக்கங்களையும் கூறிவிட்டு, இவர்கள் எல்லோரும் காரணமே இல்லாமல், எவரோ ஒருவர் செய்த தவறுக்காக பலியாவது முறையா? சாலை விதியை மதியுங்கள் என்று கூறும்படியாக படம் முடிகிறது. இந்த கதையின் சிறப்பு: புதிதாக எதுவும் இல்லை ஆனால், புதியது. சஸ்பென்ஸ் என்று எதுவும் இல்லை. ஆனால், போர் அடிக்கிறது என்று எவரும் கூற முடியாது. அழுகையாய் முடிகிறது; ஆனால், பெயர் வாங்கிக் கொள்ள இயக்குனர் அதை செய்ய வில்லை.
நிறை:
1. அஞ்சலி-ஜெய் கதாபாத்திரங்கள்; அவர்கள் இடையிலான காதல்.
2. இயக்குனர் கவனித்துள்ள சிறு சிறு விடயங்கள். உதாரணம்: ஒரு கண்டெக்டர் கை கழுவ உதவியில்லாமல், அக்குளில் பாட்டிலை வைத்து தானே கழுவுதல்; ஜெய் அவருக்கு உதவுதல்
3. சாலை பாது காப்பு, உடல் தானம், காதலில் தேவையான மாற்றம், பெண் விடுதலை போன்ற புரட்சிகர எண்ணங்களை, ஒப்புக் கொள்ளும் இடத்தில் சரியாக அளித்துள்ள விதம்.
4. இயற்கையாக படம் பிடிக்கப் பட்ட விபத்துக் காட்சிகள்.
5. அவர் இப்போது தான் போனார்; அதனால் தான் அவர் இங்கு இல்லை என்பன போன்ற தேவை இல்லாத விளக்கங்கள் படத்தில் இல்லை. அதாவது, கதை சொல்லும் விதத்தை பார்த்தாலே, இக்கால இயக்குனர்களுக்கு இந்த தலைமுறைக்கு parallel narration புரியும் என்ற நம்பிக்கையுடன் படம் எடுப்பது தெளிவாகத் தெரிகிறது.
குறை:
1. தமிழ் சினிமாவில் பல காலமாக இருக்கும் சில சிறுபிள்ளைத் தனம் இவரிடமும் உள்ளது. உதாரணம்: அனன்யாவிடம் பேசிவிட்டு புதுவரவு வெளியேறும் நேரத்தில் அண்ணலின் கையை, அவள் தொடுவது. எவ்வளவு முறை பாக்குறது சார்?
2. விபத்துக் காட்சிகள் நீளமாக உள்ளன. இரண்டாவது முறையாக பார்க்க வந்தவர்கள் எழுந்து வெளியேறுவதை பார்க்க முடிந்தது. முடிவில், அஞ்சலியின் துயரத்தை விளக்க ஒரு அமைதி, பின் பெரிய அழுகை என்ற ஃபார்முலா இதுவே கடைசி முறையாக இருக்கட்டும்.
3.அஞ்சலி அழும்போது, அவர் பேசும் வசனங்கள் புரியவில்லை. எவரேனும் அவரிடம் சொல்லுங்கள்!
விமர்சனம் முடிந்துவிட்டதே! இன்னும் சொல்ல என்ன இருக்கிறது என்று நினைக்கவேண்டாம். இந்த படத்தை நான் முதலில் பார்க்க நினைத்ததற்கு காரணம், முருகதாஸ் பானர் மற்றும் படத்தின் முன்னோட்டம் தான். ஆனால், சில நாட்களுக்கு முன், சிலர் பேச்சை கேட்டு படம் சரியில்லை என்று முடிவு கட்டினேன். ஆனால், காலம் என்னை அதனிடம் இட்டுச் சென்றது. இப்போது பார்த்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன். அப்படி என்ன சொல்லி தடுத்தார்கள்? அப்படி என்ன தவறாக சொல்லிவிட்டார்கள்?
இப்போதெல்லாம் ஒரு படத்தை ‘ஹாலிவுட் காப்பி’ என்று கூறிவிட்டால், அவர்கள் தான் பெரிய மூளைக் காரர்கள் என்ற நினைப்பு இருக்கிறது. இந்த படத்திலும் தமிழ் படங்கள் மற்றும் ஆங்கிலப் படங்களை பார்த்து காப்பி அடித்திருக்கிறார்கள் என்று குறை கண்டுபிடிக்கப் படுகிறது. குறைகள் கண்டுபிடிக்கப் படுவது தவறல்ல. ஆனால், அவை உண்மையில் குறைகளா?
இரு வண்டிகள் இடித்துக் கொண்டால், அதில் இரு முன்பின் காணாத பாத்திரங்கள் இணைந்தால், உடனே ரிதம், வானம் படங்களின் சாயல் என்று கூறுகின்றனர். அதே சமயம், விபத்து நடந்ததற்கான காரணம் பார்த்தால், ஆங்கிலப் படமான 'ஃபைனல் டெஸ்டிநேஷன்' மாதிரியே இருக்கிறது. ஆனால், அவை காப்பியா என்று ஆராய்ந்தால், இல்லை என்பதே விடை. விளக்கங்கள் வருமாறு.
1. இந்த படம் சில நாட்கள் முன்பு நடந்த வேலூர் சாலை விபத்தை சாயலாகக் கொண்டிருக்கிறது. அதோடு, பெரும்பாலான சாலை விபத்துக்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வண்டிகள் மோதினால் தான் நடக்கும் (போஸ்ட் கம்பம்? என்று கேட்காதீர்கள்; கடுப்பாகிவிடுவேன்). அதில் பயணம் செய்யும் எல்லோரும் ஒருவருக்கொருவர் அறியாதவர்களாய் தான் இருப்பர். சாலை விபத்து என்றவுடன் வித்யாசமாக எதையாவது காட்டவேண்டும் என்று யோசித்து, நடைமுறையில் சாத்தியம் இல்லாத ஒன்றை இயக்குனர் காண்பிக்க விரும்ப மாட்டார்கள். எப்போதும் நடக்கும் ஒரு சம்பவத்தை வேறு கோணத்தில் எப்படிப் பார்ப்பது என்பதிலே தான் அவர்கள் கதை புனையும் திறன் வெளிப்படும்.
அந்த வகையில், இந்த விபத்து, பல வழிகளில், ரிதம் மற்றும் வானம் படங்களிலிருந்து வேறுபடுகிறது. உதாரணம்: ரிதம், ஒரு ரயில் விபத்தில் உயிரிழந்த இருவரின் துணைகள் எப்படி ஒருவருக்கொருவர் துணை ஆகின்றனர் என்பதைப் பற்றியது. இந்த கதையில், இரு காதல் ஜோடிகளும், பார்ப்போர் மனதை அள்ளுகின்றன. இவர்கள் இருவரும் இணைந்து வாழ வேண்டும் என்று எல்லோரும் விரும்பும் படியான சுவாரஸ்யம் அவர்கள் காதலில் இருக்கிறது. அப்படிப் பட்ட ஜோடி, அற்ப காரணத்திற்காக பிரிந்தால்? என்ற கேள்விக் குறி இருக்கிறது. ஆக, முதல் படம் காண்பிக்க நினைத்தது உறவுகளில் தேவையான புரட்சி. எங்கேயும் எப்போதும் சொல்வது, உறவுகளில் பிரிவு ஏற்படக் காரண கர்த்தாவாக இருக்கும் ஒழுங்கீனத்தை சரி செய் என்ற அறிவுரை. வானம், பல சமூகப் பிரச்சனைகளை ஒரே இடத்தில் அலசி, முடிவு சொல்கிறது; எங்கேயும் எப்போதும், ஒரே ஒரு பிரச்சனையின் தீவிரத்தை, மனதை கொள்ளை கொள்ளும் காதலின் வழியாகச் சொல்கிறது.
2. இந்த கதையின் Narration style, ஆங்கில பாணி என்று சொல்லப் படும் Parallel Narration யுக்தியை பயன்படுத்துகிறது. அதாவது, ஒரே கதையில் இரு வேறு கதைகளை ஒரே நேரத்தில் சொல்வது. இந்த(ஹாலிவுட் காப்பி) பொதுவான, தவறான கருத்திற்கு காரணம், நம் படங்கள், இந்த பாணியை அதிகம் உபயோகிக்காதது தான். துவக்கம், இடைவெளி, முடிவு என்ற நேர் பாணிக்கு linear narration என்றும், இவை மூன்றும் கலந்து/தலைகீழாக வருவதற்கு Non-linear narration என்றும், ஒரே கதையில் இரு கதைகள் ஒழுங்காகவோ, தலைகீழாகவோ, கலந்தோ வந்தால், அந்த பாணிக்கு Parallel narration என்றும் ஆங்கிலத்தில் பெயர் கொடுத்துள்ளனர். இந்த மூன்று பாணிகளில், எல்லா படங்களும் அடங்கும். ஒரு படம், மற்றொரு படத்திலிருந்து காப்பி செய்யப் பட்டிருக்கிறது என்று கூற, ஒரு காட்சியோ, கதையோ, கதையின் நிகழ்ச்சிக் கூறோ (PLOT), ஒரே மாதிரியாக, இருக்க வேண்டும். இந்த கதையில் அப்படி எதுவும் இல்லை! இருந்தாலும், அது நடைமுறையில் எப்போதும் நடப்பவை தான் என்பதால், படத்திலிருந்து தான் சுடப்பட்டது என்று கூற காரணம் போதவில்லை. (இரண்டு படங்களில், ஒரு ஹீரோ ஆபத்தில் இருந்தால், ஒன்று வில்லன் ஜெயிப்பான்; அல்லது ஹீரோ பிழைப்பார். இந்த இரண்டு முடிவும் கொண்ட எல்லா படங்களும் காப்பி என்று கூரமுடியாதல்லவா? அது போலத் தான் இதுவும்)
அடுத்த தவறான பார்வை: இந்த இரு கதைகள் குழப்பமாக இருக்கிறது. காதல் படம் என்று பார்த்தால், முழுவதும் காதலும் இல்லை; மெசேஜ் படம் என்று பார்த்தால், முழுவதுமாக மெசேஜும் இல்லை என்று சொல்லக் கேட்டேன். இதுவும் ஒரு குறையா? அல்ல!
1. இயக்குனரும் ஒரு புது வரவு என்பதால், இந்த படம் வியாபார ரீதியாக வெற்றி பெற, அதிகம் பயன்படுத்தாத இரு காதல் கதைகளை சொல்லி, அதன் மூலமாக சில கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார். அதோடு, இறக்கும் நிலைக்குத் தள்ளப் படும் கதாபாத்திரங்கள், ரொம்பவும் விரும்பத் தக்க ஒன்றாக இருந்தால், விபரீதத்தின் வீச்சு புரியும் என்று யோசித்திருக்கிறார். இதனால் தான் காதலும், மெசேஜ்-உம் இணைத்துக் கொடுக்கப் பட்டிருக்கிறது. ஜெய் போன்ற ஒரு பால் மணம் மாறாப் பிள்ளையும், சிட்டி வாசனையே இல்லாத அனன்யா போன்ற அப்பாவியும் இறந்தால்(முடிவு இதுவல்ல)? அவர்கள் இறப்பிற்கு ஒரு மண் லாரியின் மெத்தனப் போக்கு தான் காரணம் என்றால்? அப்போதாவது இரக்கப் பட்டு திருந்துமா சமுதாயம்? காதல் தான் எல்லோருக்கும் பிடிக்கும். அதுவே இங்கு அடிபடுகிறதென்றால்?
2. இந்த படத்தில், Parallel Narration இற்கான மரபு சரியாக கடைபிடிக்கப் பட்டிருக்கிறது. படம் பார்க்கவில்லை என்றால், இதை கவனியுங்கள். இரு காதல் கதை; இரண்டும் முடியும் இடம், ஒரு விபத்து. முதலில், விபத்தை பற்றிய அறிமுகம்; பின் 1 -ஆவது காதல் கதைக்கான அறிமுகம்; பின் 2 -ஆவது கதைக்கான அறிமுகம். இது முடிந்ததும், Alternate order (1-2-1-2) பாணியில் இரண்டு கதைகளையும் முடிவுக்கு அருகில் கொண்டு வந்துவிட்டு, கடைசியாக விபத்தின் மீதி காட்சிகளை காண்பிப்பது. இரு கதைகளை மட்டும் உபையோகிப்பதாய் இருந்தால், கதை மாறும் இடத்தில் ஒரு link இருப்பது அழகாக இருக்கும். இதற்கு விபத்துக் காட்சிகளை உபயோகித்திருக்கின்றனர். இது இப்படி கவனிக்கப் பட்டால், குழப்பமே இல்லை. இந்த மாதிரியான கதை பாணி, தமிழ் சினிமாவுக்குப் புதியது என்பதால் தான் சிலர் குழம்புகின்றனர். தவறில்லை! ஆனால்,ஒன்று புரியாவிட்டால் படம் சரியில்லை என்று கூறுவதை விடுத்து, புரிந்து கொள்ள முற்பட்டால், முன்பு கிடைத்ததை விடவும் அழகான பொழுதுபோக்கு உங்களுக்கு கிடைக்கும். நல்ல படங்கள் மக்களை அடையும். இந்த மாதிரியான படங்களில், இயக்குனர் விளக்க நினைப்பது சமுதாயப் பிரச்சனையைத் தான்.தன் கதை சொல்லும் புத்தி சாலித் தனத்தை அல்ல! அதனால், எதை எங்கு எதிர்பார்க்க வேண்டுமோ, அதை அங்கு எதிர்பார்க்கும் பக்குவம் பெறவேண்டும். எனினும், புத்திசாலித் தனமே இல்லை என்றும் சொல்ல முடியாது.
1. படம் முடியும் நேரத்தில், ஆம்புலன்ஸ் கதவு மூடும் போது, சாலை விதிகளை மதியுங்கள் என்ற வாசகத்தை காண்பித்தது அழகோ அழகு.
2. உடல் தானம் பற்றி சமுதாயத்தின் பார்வையைப் பற்றி தனக்கு இருக்கும் கோபத்தை, அஞ்சலி போன்ற அழகான பெண்ணின் வாயிலாக, இன்றைய வாலிபர்களின் பிரதிநிதி போல் இருக்கும் ஜெய்-இன் முகத்தில் அறைந்தார் போல் இயக்குனர் சொல்வது, கோபத்தை வெளிப்படுத்தும் பக்குவம் எனக்கிருக்கிறது என்று உலகிற்கு காண்பித்ததைப் போல் இருந்தது.
3.எல்லோரும், சாலை விபத்தேன்றாலே முதலில் ஓட்டுநரைத் தான் குறை சொல்வார்கள். ஆனால், இந்த படத்தில், ஓட்டுனர் தவறு செய்யும் போது விபத்து நேராது; அவர் கவனக் குறைவாக இருக்கும் போது கூட நேரலாம் என்று கூறுவது, என்னைப் பொறுத்தவரை ஓவர் தி டாப்!
4.அசம்பாவிதத்தைப் பற்றி எல்லோருக்கும் புரியவைக்க வேண்டும் என்று ஆர்வத்தில் கோளாறாக எதையும் செய்யாமல், பார்வையாளருக்கு நிம்மைதி அளிக்கவும் எதையோ முயன்றது (முடிவை திரையில் பாருங்கள்) பாராட்டிற்குரியது.
இது போன்று மேலும் பல. ஆக மொத்தம், படம், பார்க்க வேண்டிய படம். என் ரேடிங், ஐந்துக்கு...








