Pages

Showing posts with label constitution. Show all posts
Showing posts with label constitution. Show all posts

Saturday, February 15, 2014

கேஜ்ரிவால் அரசு ஜன்லோக்பால் பில்லை தாக்கல் செய்யலாமா? கூடாதா?

பல்வேறு தரப்புகளிலிருந்து கேஜ்ரிவால் அரசு மீது பல குற்றச் சாட்டுகள் வைக்கப் படுகின்றன. முக்கியமானது ஜன லோக்பால் பில்-ஐ தில்லியில் கொண்டுவர அந்த அரசுக்கு உரிமை இல்லை என்ற கருத்து. இது முற்றிலும் தவறானது.
தில்லியில் ஜன லோக்பால் பில்லை கொண்டு வர அந்த அரசுக்கு முழு உரிமை உண்டு!
கூடுதல் தகவல்கள்:
௧. ஜன்லோக்பால் பில்லும் மத்திய அரசு கொண்டு வரும் லோக் பால் பில்லும் முட்டிக்கொள்ளும் நிலைமை வந்தால், மத்தியில் தாக்கல் செய்யப்பட பில் முக்கியத்துவம் பெரும்.
௨. தில்லி மற்றும் புதுச்சேரி அரசுகள் தனித்துவம் வாய்ந்தவையே. ஆனால், தாக்கல் செய்யப்பட்ட பிறகு வரும் குழப்பத்தால் மத்திய அரசு பில்லிற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
௩. லெஃப்டினன்ட் கவர்னர் இந்த பில்லுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றால் தாக்கல் செய்யப்பட்ட பிறகு ஜனாதிபதியிடம் தெரிவிக்கலாம். தாக்கல் செய்வதற்கு முன்னதாக அவர் தில்லி அரசின் அமைச்சர் குழுவின் (Advice of the council of Ministers) பரிந்துரைகளை தான் ஏற்கவேண்டும். ஆகவே, இங்கேயும் தாக்கல் செய்வதில் எந்த குழப்பமும் இல்லை.
௪. தாக்கல் செய்யப்பட்ட பிறகு, தில்லி அரசு ஜனாதிபதியின் அனுமதி இருந்தால், ஜன்லோக் பால் பில்லை பயன்பாட்டிற்குக் கொண்டு வர எந்த வித தடையும் இல்லை.

மேற்குறிப்பிட்ட விவரங்களை படித்த பிறகு, தாக்கல் செய்யலாமா வேண்டாமா என்ற கேள்வி தேவையற்றது என்பது விளங்குகிறது. தாக்கல் செய்தபிறகு உள்ள சிக்கல்களை பற்றிய குழப்பமே நீடிக்கிறது. தற்போதைய நிலைமையில், தில்லி அரசு சட்டத்திற்குப் புறம்பாக எதையும் செய்யவில்லை என்பது புலனாகிறது.