Showing posts with label viswaroopam. Show all posts
Showing posts with label viswaroopam. Show all posts
Friday, February 1, 2013
Criticisms On Kamal Hassan And Clarifications Regarding Viswaroopam Issue
Once the movie Viswaroopam’s issue took viswaroopam, almost everybody
started to criticize every move of Kamal Hassan. Viswaroopam stood at seventh
place in Twitter trends which is an example of how hot the plate was. I, simply
as a story writer, supported Kamal Hassan. Though I am a fan of him, I looked
for flaws in Kamal Hassan’s actions. I did get few in the beginning. But now
after being aware of some details, I am sure that any honest celebrity would do
the same in such circumstances. I compile some of the main criticisms and the
clarifications for the same from my side.
Clarification: When Kamal announced the delay of his movie due to DTH plans, a media person asked whether he would screen the movie to muslim groups as per their request. Kamal replied that he would if he thought it is very important and asked media not to turn this into a sensation.
While speaking about his comments in Chidambaram book release function he said,
1. Kamal Hassan screened the movie to Protesters and he fled to Los Angeles for Hollywood Premiere.
Labels:
ADMK,
afganistan,
ban,
cinema,
court,
government,
kamal,
kamal hassan,
taliban,
Vishwaroop,
Vishwaroopam,
viswaroopam
Sunday, December 9, 2012
DTH தொழில் நுட்பம் பற்றி கமலின் பேச்சு!
DTH ஒரு புதிய பரிணாமம்:
புதிய முயற்சிகளை, கண்டுபிடிப்புகளை முதலில் உதாசீனம் செய்வதும் ஏளனம் செய்வதும் ஏன்... அவைகளைக் கண்டனம் செய்வதும்கூட உலக வழக்கம்.
உலகம் உருண்டை வடிவம் என்று சொன்ன விஞ்ஞானி கலீலியோவை எரித்துக் கொல்ல வேண்டும் என்று சொன்ன இஸ்பானிய ராணி முதல் இன்றைய சினிமாத்துறையினர் வரை இம் மனப்பாங்கு நீடிக்கிறது.
ராஜ்கமல் நிறுவனத்தின் DTH முயற்சியையும் புரிதல் இல்லாததால் ‘புறக்கணிப்போம், புறந்தள்ளுவோம்’ என்ற பதற்றக்குரல்கள் எழுகின்றன. தேவையற்ற புரளிகளையும் கிளப்புகிறது ஒரு கூட்டம்.
ஆனால் திரைத்துறையில் ஒரு பெரும் கூட்டம் – பெரும்பான்மை – ‘இது சினிமா வர்த்தகத்தின் புதிய பரிணாம வளர்ச்சி; தமிழ் சினிமாவை, ஏன்… உலக சினிமாவையே புதிய வருமான எல்லைகளைக் கடக்க வைக்கும் முயற்சி’ என்று என்னைப் பாராட்டுகிறது. இது சந்தோஷமான செய்தி. DTHற்கு வெகுவான வரவேற்பு உள்ளது. இது சினிமாவை வலுப்படுத்தும் இன்னொரு வியாபாரக்கிளை.
ஒரு சிறுபான்மை மட்டும் இது நாசம் விளைவிக்கும் என்று ஆவேசம் கொள்கிறது.
இந்த DTH என்பது என்ன? எல்லார் வீட்டிலும் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியா என்றால் இல்லை. நல்ல வசதி உள்ளவர்கள் அதிகப் பணம் கட்டி ஒரு கருவியின் மூலம் பல சானல்களையும் சினிமாவையும் பார்க்க உதவும் கருவி.
சினிமா அரங்குக்கே செல்ல மறந்த மறுத்த வசதியான கூட்டம் சினிமாவை வீட்டோடு அனுபவிக்க உதவும் ஊடகம் இந்த DTH. இப்படி வீட்டோடு தங்கியவர்களையும் சினிமா பக்கம் ஈர்க்கும் முயற்சியே இது. இதை விடுத்து படம் சரியாக அமையாததால் கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு ஓடப் பார்க்கிறார் கமல் என்று புரளிகள் கிளம்புகிறார்கள். கிடைத்ததைச் சுருட்டும் பழக்கம் எனக்கில்லை என்பதற்கு என் சினிமா வாழ்வும் நான் எடுத்த சினிமாக்களும் சான்று. என் படம் முடிந்து 7 மாதங்களாகின்றன. இப்பொழுது என் படத்திற்கு விலை கொடுத்து வாங்கப் பலர் பெரிய விலைகளைச் சொல்லியும் விற்காமல் எல்லா ஊடகங்களிலும் படம் நல்ல வசூலை ஈட்ட வழி செய்யவே இந்த முயற்சி. முழுமையாக மக்களின் ஆர்வம் வருமானமாக மாறி படத்தயாரிப்பாளர் கையில் சேர்ந்தால் திரை உலகு மேம்படும். நேர்மையான வியாபாரத்தில் அனைவரும் ஈடுபட்டு நல்லபடி வரிகட்டி அரசிடம் எடுத்துச் சொல்லி கறுப்புப் பண விளையாட்டைக் குறைத்துக் கொண்டால், 5 வருடத்தில் தமிழ் சினிமா இந்தி சினிமாவின் வசூலுக்கு நிகராகும்.
ஒரே நாளில் விஸ்வரூபத்தின் தமிழ்இசை இந்தியாவிலேயே அதிக விற்பனையான இசை தகடாக இருக்கிறது. இன்னும் சில தினங்களில் இந்தியாவிலேயே அதிக விற்பனையான இசை தகடாக முதல் இடத்திற்கு வி.ரூ வரும் என்கிறது வியாபார வட்டாரம். இது ஒரு வர்த்தக சாதனை. ஏற்கனவே உலக வர்த்தகம் இந்திய சினிமாவை நல்ல பொருள் ஈட்டும் களம் என நம்புகிறது. உலகத்துக்கு இருக்கும் நம்பிக்கை உள்ளூரிலும் இருக்க வேண்டாமா?
DTH ல் ஒரே ஒரு காட்சி காட்டப்படும். இதை பதிவு செய்ய முடியாது. பிரத்தியேகக் காட்சி முடியும் போது படம் DTH கருவியில் தங்காது. ஒரு முறை இப்படத்தைப் பார்க்க 1000 ரூபாய் கட்டணம். தியேட்டர் கட்டணத்தைப் போல் பத்து மடங்கு. காட்சியை வீட்டில் பார்த்த சந்தோஷம் தவிர சினிமா தியேட்டரில் கிடைக்கும் அனுபவம் கண்டிப்பாய்க் கிடைக்காது.
விஸ்வரூபத்தில் ஒலி அமைப்பு இதுவரை இந்திய ரசிகர்கள் கேட்டிராத அளவு அற்புதமாக செய்திருக்கிறோம். ஹாலிவுட் படத்தயாரிப்பில் அதுவும் மேல் தட்டுப் படங்களில் மட்டுமே தென்படும் தரமிது. இத்தனையும் செய்தது TV-ல் காட்டுவதற்கு மட்டும் அல்ல.
DTH வசதி தமிழக ஜனத்தொகையில் 3 விழுக்காடு வசதி படைத்தவர்களிடம் மட்டுமே இருக்கிறது. அதில் நாங்கள் 1½ விழுக்காடு வாடிக்கையாளர்களிடம் மட்டுமே காட்ட முடியும் என்கிறது கணக்கு. 100 பேர் ஒருவனுக்கு பயப்படுவது ஆச்சரியம்.
7½ கோடியில் ஒரு விழுக்காடு படம் பார்த்தால் குடியே கெடும் என்பவர்கள் நமது வருமானத்தில் 50% ஐ கள்ள DVD வியாபாரி கொண்டு போவதைத் தடுப்பதற்கு சிறு முயற்சிகளே செய்கிறார்கள். கள்ள DVDக் காரர்களுடன் கூட்டுச் சேர்ந்து பயிரை மேயும் வேலியை விட்டு விட்டு நேர்மையான வியாபாரத்தைத் தடுப்பது கண்டிக்கத்தக்கது.
திருடனுக்கு 50% கொடுத்தாலும் கொடுப்பேன்; உடையவனுக்கு ஒன்று கூட சேரக்கூடாது என்பது நியாயமில்லாத வாதம்.
இந்த முயற்சியால் தியேட்டரில் கூட்டம் குறையாது. தொலைக்காட்சியில் இலவசமாய் படம் காட்டினால் வியாபாரம் கெடும் என்று எதிர்த்துத் தோற்ற இதே வியாபாரிகள் இன்று சுபிட்சமாக வாழும் சான்றே போதுமானது. பகுத்தறிவாளனாக இருப்பினும் பெரும்பான்மையினர் புரிந்து கொள்ள ஒரு பக்தி விளக்கம். வீட்டில் பெருமாள் படம் காலண்டரில் தொங்குவதால் யாரும் திருப்பதிக்குப் போவதைக் குறைத்துக் கொண்டதாய்த் தெரியவில்லை. கிட்டதட்ட அந்த நிலைதான் சினிமா அரங்க அனுபவத்திர்கும் வீட்டில் மின் விசிறி இருப்பினும் காற்று வாங்க கூட்டம் கடற்கரைக்கு வருகிறது. ரேடியோவில் தன் குரல் கேட்டால் புகழ் குறையும் என்று, நினைத்துப் பாடாமல் இருந்த கர்நாடக பாகவதர்கள் போல் இருப்பது உசிதமல்ல. சமையலறையும் நல்ல சமையலும் பல வீடுகளில் இருப்பதால் ஹோட்டல்களை மூடிவிட்டார்களா என்ன?
முடிவாக இது முஸ்லிம்களை தவறாக சித்தரிக்கும் படம் என்று சந்தேகப்படுகிறதாம் ஒரு சில முஸ்லிம் அமைப்புகள். இந்த முஸ்லிம்கள் படத்தை பார்த்து, மனம் மாறி, தேவையில்லாமல் கமல்ஹாசனை சந்தேகப்பட்டுவிட்டோமே என்று மனதிற்குள் வருந்துவர். அவர்கள் மனதிற்குள் வருந்தினால் மட்டும் போதாது. நான் விடமாட்டேன். சகோதரனைச் சந்தேகப்பட்டதற்கு பிராயச்சித்தமாக அந்த முஸ்லிம் சகோதரர்கள் அடுத்த பக்ரீத்துக்கு அண்டா அண்டாவாக பிரியாணி விருந்தளிக்க வாக்களிக்க வேண்டும். அத்தனை பிரியாணியையும் நான் ஒரு ஆள் சாப்பிட இயலாது. ஆதலால் நம் அன்பின் சான்றாக பசித்த ஏழைப் பிள்ளைகளுக்கு அதை விருந்தாக்குங்கள். எப்போதும் போல அக்குழந்தைகளின் சாதி-மதம் பார்க்காமல் அதைச் செய்யுங்கள். அப்பெருவிருந்தில் கலந்து கொள்ள நான் பசியுடன் காத்திருக்கிறேன்.
-கமல் ஹாசன்
Labels:
atheism,
cinema,
DTH,
kamal,
kamal hassan,
love,
Muslim,
tamil,
tamilnadu,
technology,
thamizh,
viswaroopam,
voice
Saturday, December 8, 2012
கமல் ஹாசனின் DTH முயற்சி திரை அரங்கு உரிமையாளர்களை பாதிக்காது- சில காரணங்கள்

விஸ்வரூபத்தை DTH ல் வெளியிட முதல் முறையாக கமல் முயற்சி எடுத்துள்ளார். இதைப் பற்றி தயாரிப்பாளர்களுடனும், திரை அரங்கு உரிமையாளர்களுடனும் கலந்து ஆலோசித்திருக்கிறார்.
இந்த முடிவு தியேட்டர் உரிமையாளர்களை நஷ்டப் படுத்தாது என்பது தான் கமலின் வாதம். விளம்பரம் அதிகமாகும்; இதன் மூலம் மக்கள் திரையரங்கிற்கு அதிகமாக வருவார்கள் என்று அவர் சொல்கிறார்.
ஒரு குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் இருக்குமாம். இதை எல்லோரும் ஏற்க மாட்டார்கள். தனியாக படம் பார்க்கச் செல்பவர்கள் எல்லோரும் அரங்கத்திர்க்கே வருவார்கள். திருட்டு விசிடியில் படம் பார்க்க விருப்பம் இல்லாதவர்களால் தான் இப்போது படங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
இதை எதிர்த்து அபிராமி ராமநாதன் விடுத்துள்ள எச்சரிக்கையில், கிரிகெட்-ஐயும் திரை அரங்கையும் ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.
அவர் சொல்வது போல கிரிகெட்-ஐ டிவியில் ஒளிபரப்பிய பொது ஏற்பட்ட மாற்றத்தை போல இங்கு நிகழாது. காரணம்,
கிரிகெட்-ஐ மைதானத்தில் பார்ப்பதை விட டிவியில் தான் சிறப்பாக பார்க்க முடியும். ஆனால் படத்தை திரையரங்கில் பார்க்கும் போது கிடைக்கும் பார்வை அனுபவத்தை டிவியில் பெற முடியாது.
வீரர்களை அருகில் காண்பது மைதானத்தில் அரிது. டிக்கெட் வாங்க கால் கடுக்க நிக்க வேண்டும். ஆனால் திரையரங்கில் அவ்வாறு இல்லை.
இதனால் ஒரு வேளை டிவியில் பார்க்க முடியாவிட்டால் திரை அரங்கிலேயே பார்த்துக் கொள்ளலாம் என்றே எல்லோரும் யோசிப்பார்கள். ஓரிடத்தில் நான்காயிரம் பேர் கூடி நின்று பார்க்க நினைக்க மாட்டார்கள்.
Labels:
cinema,
DTH,
kamal,
kamal hassan,
viswaroopam
Subscribe to:
Posts (Atom)




