Pages

Friday, November 21, 2014

ருத்ரய்யாவுக்கு பிரபல்யம் தேவையில்லை

என்னுடைய படைப்பை லட்சம் பேரிடம் சென்றடையச் செய்ய, என் பெயரை அதிலிருந்து நீக்கிவிட்டு, புகைப்படத்தையும் மறைக்க வேண்டும் என்கிற கட்டாயமான நிபந்தனை விதிக்கப்பட்டால், அதை செய்ய நான் தயாராக இருக்கிறேன். இதை ஒரு பிரபலம் சொல்லும் போது அது வெட்டி விளம்பரம் ஆகும்..என்னைப் போன்ற ஆரம்ப நிலை எழுத்தாளர்கள் (இந்தப் பெயரை உபயோகிக்க இன்னமும் கூச்சமாக்வே இருக்கிறது) சொல்வது கடினம். ஆனால் இதை மிக்க யோசனையுடனேயே கூறுகிறேன். ஏனெனில், எந்த ஒரு மனிதனுக்கும் தேவையில்லாத ஒரு சுமை தான் இந்த பிரபல்யம் எனும் வார்த்தை..ஒரு எழுத்தாளனுக்கு அவனுடைய தனிமை மட்டுமே சிறந்த வழிகாட்டி. பிரபலமாகாத படைப்பாளியின் எழுத்தில் நேர்மை குடிகொண்டிருக்கும்..இதே போலத் தான் ருத்ரய்யாவும் யோசித்திருப்பார் என்று நினைக்கிறேன். காரணம், இன்று வழக்கத்தில் இருக்கும் பல அற்புதமான இலக்கியங்கள், இயற்றியவரின் பெயர் அறியாமலும் நிலைத்து நிற்கின்றன. இந்த பெருமை அந்த படைப்பாளியை மட்டுமே சாரும். அதை யாராலும் தடுக்க முடியாது. அந்தப் பெருமைக்கு ஒரு அங்கீகாரம் தேவையே இல்லை.. ருத்ரய்யாவுக்கு பதில் ஸ்ரீதரின் படம் பிரசுரமானால் அது தானாகவே ருத்ரய்யாவுக்கு பெருமை சேர்த்துவிடும் என்பதற்கு இப்போதைய நிகழ்வு ஒரு உதாரணம்..

0 comments: