Pages

Sunday, May 27, 2012

தன்யாவின் பகிர்வும், தமிழக மக்களின் எதிர்ப்பும்


இராக் மீது எண்ணைக்காக அமெரிக்கா தொடுத்த போரைதீவிரவாத தடுப்புப் போர்” என்று பொய் சொன்னது அமெரிக்க அரசு. அதை அம்மக்களும் நம்பினார்.Britney spears என்ற புகழ் பெற்றப் இசைக் கலைஞரிடம் இது பற்றிக் கேட்ட போது நாம் நம்முடைய President - நம்ப வேண்டும் என்றார். அரசின் சூழ்ச்சியை மக்கள் எவ்வளவு கண்மூடித் தனமாக நம்புகிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

இங்கு நம் பக்கத்து மாநிலமான கர்நாடக நமக்கு தண்ணீர் தர மறுக்கிறது. நம் உரிமையை நாம் பெறுவதற்குப் போராடினால் அதை பிச்சை என்ற வகையில் சித்தரிக்கிறது கர்நாடக அரசு. இதையும் அம்மக்கள் நம்பி நாம் எல்லோரும் இந்தியர்கள் என்ற உணர்வில்லாமல் தமிழகத்தவரை கிண்டல் செய்து கொண்டிருக்கின்றனர்.

இதற்கு ஒரு உதாரணம், சமீபத்தில் Facebook- கலக்கிய ஒரு
Controversy. தன்யா என்ற நடிகை, சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி Play
off சுற்றுக்குள் நுழைந்ததை அடுத்து ஒரு status போட்டுள்ளார். அதில் நாம் தண்ணீருக்காகமின்சாரத்திற்காக பிச்சை எடுப்பதாகவும், இந்த play off சுற்று வாய்ப்பையும் அப்படியே வாங்கியுள்ளதாகவும் எழுதியுள்ளார். இதை எதிர்த்து பல சென்னை வாசிகள் அக்னியை கக்கியுள்ளனர்.”We hate Dhanya” போன்ற பக்கங்களை தொடங்கி ஆபாச வார்த்தையில் திட்டி தங்கள் எதிர்ப்பை தெரவித்துள்ளனர். இதை அடுத்து தன்யாவின் அபிமானிகளும், தண்ணீர் பிரச்சனையில் தங்கள் மாநிலத்தை நம்பும் மக்களும், ‘We love dhanya’ என்ற பக்கத்தை தொடங்கி அந்த நடிகைக்கு தங்களது ஆதரவை தெரிவிக்க சென்னை வாசிகளை ஆபாசமாக திட்டியும், எதிர்த்தும் எழுதியுள்ளனர்.



இதையெல்லாம் எதிர்பார்க்காத தன்யா, தன்னுடைய ட்விட்டர் வலை தளத்தில் "இனி சென்னை பக்கம் வரவே மாட்டேன். தமிழக திரை உலகையும் விட்டுப் பிரிகிறேன். நான் ஒரு நடுத்தர குடும்பத்துப் பெண். சினிமாவில் பெரிதாக சாதிக்கவும் இல்லை. நண்பர்களுடன் Room எடுத்து தங்கித் தான் வாய்ப்புகளை பெற்றேன். இந்த விவகாரம் என்னையும் என் குடும்பத்தையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. எனக்கு எதிரான பேச்சுக்கள் உயிர்பயத்தை கொடுத்துள்ளதால் இங்கிருந்து கிளம்புகிறேன்" என்று மே 26 ஆம் தேதி சொல்லிவிட்டுக் கிளம்பினார். இதை ஒரு புரட்சிப் போராட்ட வெற்றியாக கருதிய அனைத்து எதிர்ப்பாளர்களும் "தமிழ் வாழ்க!", "தமிழன் நா சும்மாவா?" என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

அந்த நடிகை பொதுத் தளத்தில் எல்லோரையும் போல் உண்மை நிலவரங்களை அறியாமல் அந்த status எழுதியது தவறு. அதே சமயம், இந்த விவகாரத்தை ஒரு புரட்சியாக கையில் எடுத்துப் போராடிய 'தமிழ் திலகங்களை' பற்றி யோசிக்கும் போது ஒரு கேள்வி எழுகிறது. அந்த நடிகையை ஆபாசமாக திட்டி பணிய வைத்தது ஒரு வகையில் வெற்றி தான் என்றாலும், அந்த நடிகையோ, கர்நாடக மக்களோ தங்கள் தவறை உணரவில்லை. உங்கள் மனதை புண் படுத்தியதற்கு மன்னிக்கவும் என்று தான் அந்த நடிகை எழுதியுள்ளாரே தவிர, உண்மை தெரியாமல் பேசிவிட்டேன் என்று அவர் சொல்லவில்லைஅவர் பேசிய வார்த்தைகளில் உண்மை இல்லை என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்கும் எந்த பகிர்வும் எதிர்ப்பாளர்களின்  தளங்களில் இல்லை. உண்மையை அறியாத கர்நாடக மக்கள் இவர்களது எதிர்ப்புக் குரலை அடுத்து உண்மையை அறிய முற்பட்டார்களா என்றால் அதுவும் இல்லை. ஏட்டிக்குப் போட்டியாக அந்த நடிகையை ஆதரித்தனர். இதற்கும் அவர்களுக்கு உண்மையை புரிய வைக்கும் முயற்சியில் இப்போராளிகள் இறங்காதது முக்கிய காரணம்.

இப்போது இந்த சண்டையால் உருவான ஒரு விளைவு, இரு பக்கத்திலும் "தமிழர்கள் என்றாலே பிச்சைக் காரர்கள்" என்ற நினைப்பும், "கர்நாடகத்தவர்கள் என்றாலே நம் உரிமைகளை பறிப்பவர்கள்" என்ற நினைப்பும் வலுவாக பசுமரத்தாணிபோல் பதிந்துள்ளது. உண்மையை அறியவும், அறிவிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப் படவில்லை. இது இரு பக்கத்தில் உள்ள இரண்டாயிரத்திற்கும் அதிகமான மக்களின் மனதில் சகோதரத்துவத்தை மேலும் சீரழிக்கும் ஒரு புரட்சியாகவே முடிவுக்கு வந்துள்ளது. இனி கர்நாடகம் நமக்குத் தண்ணீர் தராமல் போகும் போது, "இவர்கள் செய்த காரியத்திற்கு இந்த தண்டனை கொடுக்க வேண்டியது தான்" என்ற எண்ணமே அவர்கள் மனதில் இருக்கும். தங்கள் அரசு தவறு செய்கிறது என்ற உண்மையை அறியும் வாய்ப்பு அவர்களுக்கு மறுக்கப் பட்டிருக்கிறது. இதுவே இந்த போராட்டத்தால் கிட்டிய வெற்றி! வாழ்க உங்கள் புரட்சி!

ஒரு மாநிலத்தின் மக்கள் தவறு செய்கிறார்கள் என்றால் அதற்கு சுயநலம் ஒரு முக்கிய காரணம். இதற்கு கர்நாடகமும் விதிவிலக்கல்ல. தமிழகமும் விதிவிலக்கல்ல.
 கூடங்குளம் என்ற இடம் தமிழகத்தின் உள்ளே தான் இருக்கிறது. இங்கு அணுக் கழிவுகளை ஆபத்தில்லாத முறையில் எப்படி வெளியேற்றப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு இன்று வரை புதைத்து வைப்போம் என்ற பதில் மட்டுமே கிடைத்துக் கொண்டிருக்கும்  நிலையில், போராட்டத்தை மத்திய அரசும், மாநில அரசும் முடக்கியதை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தவர்கள் தான் இந்த தமிழக புரட்சியாளர்கள். இதற்கு முக்கிய காரணம், அரசும், விஞ்ஞானிகளும் சொன்னதை அப்படியே நம்பும் பழக்கம் தான்.

கர்நாடகத்தைப் போல் நம் அரசு இதே தவறை செய்துவிட்டு அதற்கு ஒரு காரணம் சொன்னாலும், இந்த மக்களும் நம்பிக் கொண்டு தான் இருப்பார்கள். இன்று மின்சாரம் வேண்டும் என்பதற்காக எதிர்காலத்தில் அணுக் கழிவுகளால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை பற்றி யோசிக்கக் கூட மறுப்பவர்கள் இதை செய்ய மாட்டார்கள் என்பதில் எந்த சந்தேகமும் தேவை இல்லை


தவறுகளை திருத்திக் கொள்ள வாய்ப்பு அளிக்கப் பட வேண்டும். உண்மையை பரப்பும் புரட்சியே நிரந்தத் தீர்வை கொண்டு வரும். இதை என்று இவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று தெரியவில்லை. தற்காலிக, கட்டாயப் பணிதல், அவர்கள் மனதினுள் புகையை கிளப்பி விடும். அது என்று வேண்டுமானாலும் நெருப்பாக மாறலாம். அப்போது இந்த புரட்சியாளர்களின் முயற்சி BACK FIRE ஆகி நம்மை
யும், கர்நாடகத்தை நம்பியிருக்கும் டெல்டா விவசாயிகளையும் அழித்தால் இந்த பக்குவமில்லா போராட்டமே அதற்கு காரணமாய் அமையும். அப்போது இறங்கி வந்து போராட்டம் நடத்தை இந்த சிகாமணிகளுக்கு நேரம் இருக்குமா?