Pages

Saturday, December 8, 2012

கமல் ஹாசனின் DTH முயற்சி திரை அரங்கு உரிமையாளர்களை பாதிக்காது- சில காரணங்கள்

                                                       

விஸ்வரூபத்தை DTH ல் வெளியிட முதல் முறையாக கமல் முயற்சி எடுத்துள்ளார். இதைப் பற்றி தயாரிப்பாளர்களுடனும், திரை அரங்கு உரிமையாளர்களுடனும் கலந்து ஆலோசித்திருக்கிறார்.

இந்த முடிவு தியேட்டர் உரிமையாளர்களை நஷ்டப் படுத்தாது என்பது தான் கமலின் வாதம். விளம்பரம் அதிகமாகும்; இதன் மூலம் மக்கள் திரையரங்கிற்கு அதிகமாக வருவார்கள் என்று அவர் சொல்கிறார்.

ஒரு குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் இருக்குமாம். இதை எல்லோரும் ஏற்க மாட்டார்கள். தனியாக படம் பார்க்கச் செல்பவர்கள் எல்லோரும் அரங்கத்திர்க்கே வருவார்கள். திருட்டு விசிடியில் படம் பார்க்க விருப்பம் இல்லாதவர்களால் தான் இப்போது படங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

இதை எதிர்த்து அபிராமி ராமநாதன் விடுத்துள்ள எச்சரிக்கையில், கிரிகெட்-ஐயும் திரை அரங்கையும் ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.

அவர் சொல்வது போல கிரிகெட்-ஐ டிவியில் ஒளிபரப்பிய பொது ஏற்பட்ட மாற்றத்தை போல இங்கு நிகழாது. காரணம்,

கிரிகெட்-ஐ மைதானத்தில் பார்ப்பதை விட டிவியில் தான் சிறப்பாக பார்க்க முடியும். ஆனால் படத்தை திரையரங்கில் பார்க்கும் போது கிடைக்கும் பார்வை அனுபவத்தை டிவியில் பெற முடியாது.

வீரர்களை அருகில் காண்பது மைதானத்தில் அரிது. டிக்கெட் வாங்க கால் கடுக்க நிக்க வேண்டும். ஆனால் திரையரங்கில் அவ்வாறு இல்லை.

இதனால் ஒரு வேளை டிவியில் பார்க்க முடியாவிட்டால் திரை அரங்கிலேயே பார்த்துக் கொள்ளலாம் என்றே எல்லோரும் யோசிப்பார்கள். ஓரிடத்தில் நான்காயிரம் பேர் கூடி நின்று பார்க்க நினைக்க மாட்டார்கள்.


திரை அரங்கு உரிமையாளர்களின் பயம் நியாயமானதே. அவர்களுக்கு இதை எல்லாம் சொல்லி புரிய வைக்க நேரமாகும் என்று அறிந்தே ஒரு மாதம் முன்பே இந்த முடிவை கமல் எடுத்திருக்கிறார். அவர் அறிமுகம் செய்த தொழில்நுட்பங்கள் எல்லாம் அவரை தவிர திரை அரங்கு உரிமையாளர்களுக்கும் பயனளித்து வந்திருக்கின்றன. இன்று டி.டி.எஸ். இல்லாத திரையரங்கை காண முடிகிறதா?