Pages

Wednesday, June 5, 2013

நேற்று ரயில்வே மேன்! இன்று ஹீரோ!!


மனோகர், ரயில்வே தொழிலாளிகளின் ஹீரோ ஆகியிருக்கிறார். கடந்த மே மாதம், கும்மிடிபூண்டியில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்த வண்டியின் ஓட்டுனர் தான் இவர். கும்மிடிபூண்டியை தாண்டியவுடன் மாரடைப்பு!
உடனடியாக வண்டியை நிறுத்திய அவர், அவசர உதவி விளக்கை இயக்கிவிட்டு, சரிவில் வண்டி ஓடாமல் இருக்க சக்கரத்திற்கும், தண்டவாளத்திற்கும் நடுவில் ஒரு கல்லை வைத்துவிட்டு, சரிந்து விட்டார்.
எதிரில் வந்து கொண்டிருந்த வண்டியில் இருந்த ஓட்டுனர், விளக்கை பார்த்ததும், தன்னுடைய வண்டியை நிறுத்திவிட்டு, கார்ட்-ஐ(Gaurd) காவலுக்கு வைத்துவிட்டு, ஸ்டேஷன் மாஸ்டரிடம் சொல்லிவிட்டு, அவசர உதவி கோரிய வண்டியை இயக்கி கவரைபேட்டை ரயில் நிலையம் வரை சென்று நிறுத்திவிட்டு, மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்தார்.
பின், நான்கு கிலோ மீட்டர் திரும்ப நடந்து தன்னுடைய வண்டியை இயக்கி கும்மிடிபூண்டியை அடைந்திருக்கிறார்.
மனோகருக்கும், உதவிக்கு வந்த பாலச்சந்தருக்கும் விருது வழங்கவிருக்கிறது ரயில்வே துறை.
விமர்சனம்:
ஒன்று, மனோகர் இறந்துவிட்டார். அதற்கு முக்கிய காரணம், ஆம்புலன்ஸ் வர முக்கால் மணி நேரம் ஆனதாம்!
இரண்டு, நைட் டுட்டி அலவன்ஸ் பெறுவதற்காக தனக்கிருந்த ஜுரத்தையும் பொருட்படுத்தாமல் வேலைக்குச் சென்றதாலேயே மனோகருக்கு இந்த நிலைமை.
ரயில்வேயில் ஒரு வாக்கியத்தை அடிக்கடிச் சொல்வார்கள்.முதலில் நம் பாதுகாப்பு. பிறகு தான் ரயில் பாதுகாப்பென்று. அதை உணர்ந்து பிறர் செயல்பட வேண்டும்.
ஆயிரக் கணக்கான பயணிகளின் உயிரை காப்பாற்றி இறந்த மனோகருக்கு ஒரு சல்யூட்! நேரம் கருதி சமயோசிதமாக செயல்பட்ட பாலச்சந்தருக்கு ஒரு பாராட்டு!

0 comments: